• Mar 04 2025

நாடு பொருளாதார ஸ்திரமடைவதற்கு ரணில் இயற்றிய சட்டங்களே காரணம்! அனுராத ஜயரத்ன பெருமிதம்

Chithra / Mar 2nd 2025, 7:59 am
image

  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான சூழ்நிலையில்   பல புதிய சட்டங்களை இயற்றியதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை  எவராலும் மறுக்க முடியாது. எம்மால் முன்வைக்கப்பட்ட சட்ட வரைபுகளை திருத்தங்களுடன் சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  அத்தியாவசிய காரணிகளை கருத்திற்கொண்டு பல சட்டங்களை இயற்றினோம்.  

2022 ஆம் ஆண்டு 14 சட்டங்களும், 2023 ஆம் ஆண்டு 11 சட்டங்களும், 2024 ஆம் ஆண்டு 11 சட்டங்களும் இயற்றப்பட்டன.

கடுமையான சூழ்நிலையில்  புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

90 சட்ட வரைபுகள் குறித்த குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றை சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

நீதிமன்ற கட்டமைப்பு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பபட வேண்டும். இதற்கு குறைந்தது 3.2 பில்லியன்  ரூபா செலவாகும் என்ற மதிப்பிடப்பட்டது. 

தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில்  அது சாத்தியமற்றது என்பதை அறிவோம். இருப்பினும் நீதிமன்ற  கட்டமைப்பை  டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டை கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும்.

ஏதேனும் குற்றச்செயலின் சந்தேக நபராக கருதப்படும் நபரை வீட்டுத் தடுப்புக் காவலில் வைக்கும் வகையில் சட்டத் திருத்த வரைபியை முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச  ராஜபக்ஷ அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார். ஆகவே இந்த வரைபை சட்டமாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்றார்.

நாடு பொருளாதார ஸ்திரமடைவதற்கு ரணில் இயற்றிய சட்டங்களே காரணம் அனுராத ஜயரத்ன பெருமிதம்   முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான சூழ்நிலையில்   பல புதிய சட்டங்களை இயற்றியதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை  எவராலும் மறுக்க முடியாது. எம்மால் முன்வைக்கப்பட்ட சட்ட வரைபுகளை திருத்தங்களுடன் சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  அத்தியாவசிய காரணிகளை கருத்திற்கொண்டு பல சட்டங்களை இயற்றினோம்.  2022 ஆம் ஆண்டு 14 சட்டங்களும், 2023 ஆம் ஆண்டு 11 சட்டங்களும், 2024 ஆம் ஆண்டு 11 சட்டங்களும் இயற்றப்பட்டன.கடுமையான சூழ்நிலையில்  புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 90 சட்ட வரைபுகள் குறித்த குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றை சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.நீதிமன்ற கட்டமைப்பு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பபட வேண்டும். இதற்கு குறைந்தது 3.2 பில்லியன்  ரூபா செலவாகும் என்ற மதிப்பிடப்பட்டது. தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில்  அது சாத்தியமற்றது என்பதை அறிவோம். இருப்பினும் நீதிமன்ற  கட்டமைப்பை  டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டை கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும்.ஏதேனும் குற்றச்செயலின் சந்தேக நபராக கருதப்படும் நபரை வீட்டுத் தடுப்புக் காவலில் வைக்கும் வகையில் சட்டத் திருத்த வரைபியை முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச  ராஜபக்ஷ அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார். ஆகவே இந்த வரைபை சட்டமாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement