வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் இன்று (14) நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, அவர்கள் பாரம்பரிய மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இறை வணக்கம் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.
அதன்பின்னர் "நிஜமும் நிழலும்" இதழின் முதற் பிரதியை பாடசாலையின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் வெளியிட்டு வைக்க அதனை பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் பெற்றுக்கொண்டார்.
இதழ் வெளியீட்டு நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் ஊடகக் கண்காட்சி ஆரம்பமானது. கண்காட்சி கூடத்தை பிரதம விருந்தினர் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அதன்பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
ஊடகக் கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், சிறப்பு அதிதியாக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் பிரேமலொஜி சுதேஷ்குமார், சிரேஷ்ட பத்திரிகையாளர் தர்மினி பத்மநாதன், ஊடகத்துறை ஆசிரியர் அனுராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வட்டு இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீடு வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் "நிஜமும் நிழலும்" இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் இன்று (14) நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, அவர்கள் பாரம்பரிய மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து இறை வணக்கம் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.அதன்பின்னர் "நிஜமும் நிழலும்" இதழின் முதற் பிரதியை பாடசாலையின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் வெளியிட்டு வைக்க அதனை பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் பெற்றுக்கொண்டார்.இதழ் வெளியீட்டு நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் ஊடகக் கண்காட்சி ஆரம்பமானது. கண்காட்சி கூடத்தை பிரதம விருந்தினர் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அதன்பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.ஊடகக் கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் பதில் அதிபர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், சிறப்பு அதிதியாக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் பிரேமலொஜி சுதேஷ்குமார், சிரேஷ்ட பத்திரிகையாளர் தர்மினி பத்மநாதன், ஊடகத்துறை ஆசிரியர் அனுராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.