• Sep 20 2024

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

Tharun / Jul 22nd 2024, 6:06 pm
image

Advertisement

கற்பிட்டி - குடாவ கடற்பிரதேசத்தில் காட்டுப்பகுதிக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (21) மாலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு கைவிடப்பட்டிருந்த நிலையில் 6 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 189 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பீடி இலைகள் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திர படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என கடற்படையினர் குறிப்பிட்டனர்.


இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 189 கிலோ கிராம் பீடி இலைகள், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி கற்பிட்டி - குடாவ பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, 226 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு கற்பிட்டி - குடாவ கடற்பிரதேசத்தில் காட்டுப்பகுதிக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (21) மாலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு கைவிடப்பட்டிருந்த நிலையில் 6 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 189 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பீடி இலைகள் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திர படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 189 கிலோ கிராம் பீடி இலைகள், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி கற்பிட்டி - குடாவ பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, 226 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டது.கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement