சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம் சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது