• Sep 23 2024

அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன்..!

Sharmi / Sep 22nd 2024, 1:14 pm
image

Advertisement

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்சமயம் வௌியாகி வருகின்றன.

அந்தவகையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.

இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனுரவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது எக்ஸ் பக்கத்தில் அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவில்,

இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது.மேலும் தேசம் முழுவதும் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதன் மூலம் அவர்களின் ஆணையை நீங்கள் நிலைநாட்டுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 

உங்கள் தலைமையில் ஞானமும் வெற்றியும் பெற வாழ்த்துகிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன். 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்சமயம் வௌியாகி வருகின்றன.அந்தவகையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனுரவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது எக்ஸ் பக்கத்தில் அனுரவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவில்,இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.இந்த வெற்றி மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது.மேலும் தேசம் முழுவதும் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதன் மூலம் அவர்களின் ஆணையை நீங்கள் நிலைநாட்டுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் தலைமையில் ஞானமும் வெற்றியும் பெற வாழ்த்துகிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement