• Oct 04 2024

கழுத்தை இறுக்கிய கயிறு – விளையாடிய சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல்..! samugammedia

Tamil nila / Jan 20th 2024, 7:33 pm
image

Advertisement

செம்மலை பகுதியில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்  முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சம்பவத்தில் 10 வயதுடைய பிரசாத் தனேஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாெலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கழுத்தை இறுக்கிய கயிறு – விளையாடிய சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல். samugammedia செம்மலை பகுதியில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்  முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்த சம்பவத்தில் 10 வயதுடைய பிரசாத் தனேஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாெலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement