• Mar 18 2025

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை சந்தித்த சஜித்!

Chithra / Mar 18th 2025, 1:48 pm
image


பாராளுமன்றத்திற்கு அருகில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலின் போது, ​​அரசாங்கம் வேலைகளை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசிய வேலையற்ற பட்டதாரிகள் கூறினர்.

சுமார் 40,000 பட்டதாரிகள் வேலையற்று உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றதில் தான் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பொறுப்பான தரப்பினரிடமிருந்தோ எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர்களுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை சந்தித்த சஜித் பாராளுமன்றத்திற்கு அருகில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்தார்.பத்தரமுல்லையில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தேர்தலின் போது, ​​அரசாங்கம் வேலைகளை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசிய வேலையற்ற பட்டதாரிகள் கூறினர்.சுமார் 40,000 பட்டதாரிகள் வேலையற்று உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.இந்த விவகாரம் குறித்து பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றதில் தான் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பொறுப்பான தரப்பினரிடமிருந்தோ எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர்களுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now