• Jun 05 2025

வவுனியாவில் புதிய பேரூந்து நிலையத்தினை முற்றுகையிட்ட விற்பனை முகவர்கள் - பிரதி அமைச்சர் தலையீடு

Chithra / Jun 3rd 2025, 3:57 pm
image


வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை இன்று காலை 10.30 மணியளவில் விற்பனை முகவர்கள் முற்றுகையிட்டமையினால் அங்கு சற்று பதட்ட நிலமை காணப்பட்டதுடன் பிரதி அமைச்சரின் தலையீட்டினால் தீர்வுக்கு கொண்டு வரப்பட்டது.

பேரூந்து நிலையத்தில் இரு வர்த்தக நிலையங்கள் காணப்படுவதுடன் அவற்றில் நெடுந்தூர சேவை தரிப்பிட கட்டிடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு கடன் அடிப்படையில் 18 வர்த்தக முகவர்கள் 15 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கியுள்ளனர். 

ஒப்பந்தகாலம் நிறைவடைந்துள்ளமையினால் வர்த்தக நிலைய உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை கடந்த ஓர் வாரமாக முடியுள்ளார். இதனால் வர்த்தகருக்கு வழங்கிய கடனை மீட்க முடியாத நிலைக்கு விற்பனை முகவர்கள் தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு சென்ற விற்பனை முகவர்கள் குறித்த வர்த்தக நிலைய ஒப்பந்தகாரரின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் விலாசம் என்பவற்றினை கோரியுள்ளனர்.

எனினும் அதற்கு பதிலளித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் தம்மிடம் ஆவணங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்றையதினம் இரவு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு சென்ற குறித்த வர்த்தக நிலையத்தின் ஒப்பந்ததாரர் ஆணைக்குழு ஊழியர்களுடன் கலந்துரையாடியமையுடன் வர்த்தக நிலைய பொருட்களையும் எடுத்துச்செல்ல முயற்சித்துள்ளார்.

இதனால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் ஒப்பந்தம் மேற்கொண்டவரின் ஆவணம் எவ்வாறு இல்லாமல் செல்லும் மற்றும் இரவில் எவ்வாறு ஆணைக்குழு இயங்கும் என ஆத்திரமடைந்த விற்பனை முகவர்கள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை முற்றுகையிட்டு தமக்குரிய நீதியினையினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட தேசிய மக்கள் சக்தி பிராந்திய இணைப்பாளர் லெனின் , மாநகரசபை உறுப்பினர் லக்சகா ஆகியோர் குறித்த விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடியமையுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரிகளையும் அழைத்து பிரச்சனைகளை கேட்டறிந்தனர். 

ஒரு வாரத்தில் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தமையுடன் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து ஒப்பந்ததாரரின் தொலைபேசி இலக்கம் , விலாசம் , அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினையும் பெற்று விற்பனை முகவர்களிடம் வழங்கியிருந்தார்.

பிரதி அமைச்சரின் வாக்குறிதியினையடுத்து விற்பனை முகவர்கள் புதிய பேரூந்தினையடுத்து விற்பனை முகவர்கள் கலைந்து சென்றனர்.  


வவுனியாவில் புதிய பேரூந்து நிலையத்தினை முற்றுகையிட்ட விற்பனை முகவர்கள் - பிரதி அமைச்சர் தலையீடு வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை இன்று காலை 10.30 மணியளவில் விற்பனை முகவர்கள் முற்றுகையிட்டமையினால் அங்கு சற்று பதட்ட நிலமை காணப்பட்டதுடன் பிரதி அமைச்சரின் தலையீட்டினால் தீர்வுக்கு கொண்டு வரப்பட்டது.பேரூந்து நிலையத்தில் இரு வர்த்தக நிலையங்கள் காணப்படுவதுடன் அவற்றில் நெடுந்தூர சேவை தரிப்பிட கட்டிடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு கடன் அடிப்படையில் 18 வர்த்தக முகவர்கள் 15 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கியுள்ளனர். ஒப்பந்தகாலம் நிறைவடைந்துள்ளமையினால் வர்த்தக நிலைய உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை கடந்த ஓர் வாரமாக முடியுள்ளார். இதனால் வர்த்தகருக்கு வழங்கிய கடனை மீட்க முடியாத நிலைக்கு விற்பனை முகவர்கள் தள்ளப்பட்டனர்.இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு சென்ற விற்பனை முகவர்கள் குறித்த வர்த்தக நிலைய ஒப்பந்தகாரரின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் விலாசம் என்பவற்றினை கோரியுள்ளனர்.எனினும் அதற்கு பதிலளித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினர் தம்மிடம் ஆவணங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்றையதினம் இரவு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு சென்ற குறித்த வர்த்தக நிலையத்தின் ஒப்பந்ததாரர் ஆணைக்குழு ஊழியர்களுடன் கலந்துரையாடியமையுடன் வர்த்தக நிலைய பொருட்களையும் எடுத்துச்செல்ல முயற்சித்துள்ளார்.இதனால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் ஒப்பந்தம் மேற்கொண்டவரின் ஆவணம் எவ்வாறு இல்லாமல் செல்லும் மற்றும் இரவில் எவ்வாறு ஆணைக்குழு இயங்கும் என ஆத்திரமடைந்த விற்பனை முகவர்கள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை முற்றுகையிட்டு தமக்குரிய நீதியினையினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட தேசிய மக்கள் சக்தி பிராந்திய இணைப்பாளர் லெனின் , மாநகரசபை உறுப்பினர் லக்சகா ஆகியோர் குறித்த விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடியமையுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரிகளையும் அழைத்து பிரச்சனைகளை கேட்டறிந்தனர். ஒரு வாரத்தில் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தமையுடன் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து ஒப்பந்ததாரரின் தொலைபேசி இலக்கம் , விலாசம் , அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினையும் பெற்று விற்பனை முகவர்களிடம் வழங்கியிருந்தார்.பிரதி அமைச்சரின் வாக்குறிதியினையடுத்து விற்பனை முகவர்கள் புதிய பேரூந்தினையடுத்து விற்பனை முகவர்கள் கலைந்து சென்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement