• Sep 08 2024

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லை மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு...!samugammedia

Sharmi / Dec 21st 2023, 11:21 am
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் பல இலட்சம் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம்  கிராம சேவையாளர் பிரிவில் 24 குடும்பங்களுக்கும், மாங்குளம் மாவீரர் வீட்டுத்திட்டத்திலுள்ள 40 குடும்பங்களுக்கும் , அம்பகாமம்  கிராமசேவைகர்  பிரிவிலுள்ள 12 குடும்பங்களுக்கும், புலுமச்சிநாதகுளம்  கிராமசேவகர்  பிரிவிலுள்ள 17 குடும்பங்களுக்கும்,  கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பரிவிற்க்குட்பட்ட கேப்பாப்பிலவு குடியிருப்பை சேர்ந்த 07 குடும்பங்களுக்கும்,  உலருணவு வழங்கிவைக்கப்பட்டதுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் இடைத்தங்கல்  முகாமிலுள்ள  பண்டாரவன்னி, 04ம் கண்டம் பிரதேசத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கும், கூழாமுறிப்பு கிராமத்தை சேர்ந்த 70 குடும்பங்களுக்கும்  28,000 ரூபா பெறுமதியான இரவு உணவு வழங்கப்பட்டுள்ளன.

இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.



மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லை மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் பல இலட்சம் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம்  கிராம சேவையாளர் பிரிவில் 24 குடும்பங்களுக்கும், மாங்குளம் மாவீரர் வீட்டுத்திட்டத்திலுள்ள 40 குடும்பங்களுக்கும் , அம்பகாமம்  கிராமசேவைகர்  பிரிவிலுள்ள 12 குடும்பங்களுக்கும், புலுமச்சிநாதகுளம்  கிராமசேவகர்  பிரிவிலுள்ள 17 குடும்பங்களுக்கும்,  கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பரிவிற்க்குட்பட்ட கேப்பாப்பிலவு குடியிருப்பை சேர்ந்த 07 குடும்பங்களுக்கும்,  உலருணவு வழங்கிவைக்கப்பட்டதுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் இடைத்தங்கல்  முகாமிலுள்ள  பண்டாரவன்னி, 04ம் கண்டம் பிரதேசத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கும், கூழாமுறிப்பு கிராமத்தை சேர்ந்த 70 குடும்பங்களுக்கும்  28,000 ரூபா பெறுமதியான இரவு உணவு வழங்கப்பட்டுள்ளன.இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement