• Sep 20 2024

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு; 3 வினாக்களை நீக்குவதற்கு யோசனை!

Chithra / Sep 17th 2024, 3:52 pm
image

Advertisement

 

நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் முதலாம் பாகத்திலிருந்து மூன்று வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள் வட்ஸ்அப் செயலிமூலம் பகிரப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. 

குறித்த விடயம் தொடர்பில் வினாத்தாளைத் தயாரித்த பரீட்சை சபையுடன் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு; 3 வினாக்களை நீக்குவதற்கு யோசனை  நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் முதலாம் பாகத்திலிருந்து மூன்று வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள் வட்ஸ்அப் செயலிமூலம் பகிரப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் வினாத்தாளைத் தயாரித்த பரீட்சை சபையுடன் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.இந்நிலையிலேயே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement