• Apr 23 2026

கனமழையால் பாடசாலை மாணவர்கள் அவதி!

shanu / Apr 23rd 2026, 12:45 pm
image

மலையகத்தில் பெய்துவரும் கனமழையால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


நோர்வூட் பிரதேச சபை  பொகவந்தலாவ சென் மேரிஸ் கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 


பொகவந்தலாவ நகரில் இருந்து பாடசாலைக்கு செல்லும் பிரதான சாலையில் நகரில் இருந்து வரும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்வதில்லை.


அந்த மழை நீர் முழுவதும் சாலை வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அந்த பிரதான சாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ் சாலையை பயன்படுத்தி வரும் பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.


இது குறித்து சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் உடன் கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும் என  பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கனமழையால் பாடசாலை மாணவர்கள் அவதி மலையகத்தில் பெய்துவரும் கனமழையால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நோர்வூட் பிரதேச சபை  பொகவந்தலாவ சென் மேரிஸ் கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பொகவந்தலாவ நகரில் இருந்து பாடசாலைக்கு செல்லும் பிரதான சாலையில் நகரில் இருந்து வரும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்வதில்லை.அந்த மழை நீர் முழுவதும் சாலை வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அந்த பிரதான சாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ் சாலையை பயன்படுத்தி வரும் பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் உடன் கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும் என  பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement