இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது.
திருத்தப்பட்ட விசா விலக்கு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தற்போதுள்ள 60 நாட்கள் வரையிலான விசா இல்லா பயணச் சலுகையை இழக்கவுள்ளனர்.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தின் இணையவழி e-Visa முறையின் ஊடாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். சுற்றுலா விசா மூலம் ஒரு பயணத்தின்போது 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.
புதிய நடைமுறையின் கீழ், விசா இன்றி தாய்லாந்திற்குள் நுழையத் தகுதியுள்ள நாடுகளின் எண்ணிக்கை 93இல் இருந்து 60 ஆகக் குறைக்கப்படுகிறது.
இந்த மாற்றம், 2024 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக விசா விலக்கு திட்டத்திற்கு மாற்றாக அமைகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் 93 நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 60 நாட்கள் வரை விசா இன்றி தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
விசா விலக்கு சலுகையை இழக்கும் 21 நாடுகள்:
அல்பேனியா, அன்டோரா, கொலம்பியா, கியூபா, டொமினிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடோர், குவாத்தமாலா, ஜமைக்கா, கொசோவோ, மெக்சிகோ, மொனாக்கோ, மொராக்கோ, பனாமா, பப்புவா நியூ கினியா, சான் மரினோ, இலங்கை, டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, உருகுவே மற்றும் உஸ்பெகிஸ்தான்.
தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர விசா நடைமுறைகள் உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு தாய்லாந்து அமைச்சரவை இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விசா நடைமுறைகள் 2026 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.
இலங்கைக்கு தாய்லாந்து கொடுத்த அதிர்ச்சி செய்தி - விசா விலக்கு இரத்து இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது.திருத்தப்பட்ட விசா விலக்கு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தற்போதுள்ள 60 நாட்கள் வரையிலான விசா இல்லா பயணச் சலுகையை இழக்கவுள்ளனர்.இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தின் இணையவழி e-Visa முறையின் ஊடாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். சுற்றுலா விசா மூலம் ஒரு பயணத்தின்போது 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.புதிய நடைமுறையின் கீழ், விசா இன்றி தாய்லாந்திற்குள் நுழையத் தகுதியுள்ள நாடுகளின் எண்ணிக்கை 93இல் இருந்து 60 ஆகக் குறைக்கப்படுகிறது.இந்த மாற்றம், 2024 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக விசா விலக்கு திட்டத்திற்கு மாற்றாக அமைகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் 93 நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 60 நாட்கள் வரை விசா இன்றி தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.விசா விலக்கு சலுகையை இழக்கும் 21 நாடுகள்:அல்பேனியா, அன்டோரா, கொலம்பியா, கியூபா, டொமினிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடோர், குவாத்தமாலா, ஜமைக்கா, கொசோவோ, மெக்சிகோ, மொனாக்கோ, மொராக்கோ, பனாமா, பப்புவா நியூ கினியா, சான் மரினோ, இலங்கை, டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, உருகுவே மற்றும் உஸ்பெகிஸ்தான்.தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர விசா நடைமுறைகள் உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு தாய்லாந்து அமைச்சரவை இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய விசா நடைமுறைகள் 2026 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.