மட்டக்களப்பு வவுணதீவில் குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு காரன் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது
குறித்த துப்பாகி பிரயோகம் மேற்கொண்டவரை கைது செய்துள்ளதுடன் துப்பாகி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளளர்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின்; வீட்டுக்கு அருகிலுள்ள அவரது சகோதரனின் காணியில் குடிநீருக்காக தேசிய நீர்வழங்கல் சபையினால் வழங்கப்பட்ட கடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும் துப்பாக்கி பிரயயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்த நிலையில் அதற்கான பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினர் குடிநீரை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரணிடம் தண்ணீரை பாவித்து விட்டு ஏன் அதற்கான பணத்தை செலுத்த வில்லை என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
இந்த நிலையில் சம்பவதினமான இன்று உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியினால் பக்கத்து வீட்டுக்காரன் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்
கால் துடையில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரை கைது செய்ததுடன் துப்பாகி ஒன்றையும் மீட்டனர்
மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுணதீவில் பக்கத்து வீட்டுகாரன் மீது துப்பாக்கி பிரயோகம் - துப்பாக்கிதாரி கைது மட்டக்களப்பு வவுணதீவில் குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு காரன் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளதுகுறித்த துப்பாகி பிரயோகம் மேற்கொண்டவரை கைது செய்துள்ளதுடன் துப்பாகி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.கன்னங்குடா பாடசாலை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளளர்இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின்; வீட்டுக்கு அருகிலுள்ள அவரது சகோதரனின் காணியில் குடிநீருக்காக தேசிய நீர்வழங்கல் சபையினால் வழங்கப்பட்ட கடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும் துப்பாக்கி பிரயயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்த நிலையில் அதற்கான பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினர் குடிநீரை துண்டித்தனர்.இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரணிடம் தண்ணீரை பாவித்து விட்டு ஏன் அதற்கான பணத்தை செலுத்த வில்லை என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இந்த நிலையில் சம்பவதினமான இன்று உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியினால் பக்கத்து வீட்டுக்காரன் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கால் துடையில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுஇதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரை கைது செய்ததுடன் துப்பாகி ஒன்றையும் மீட்டனர்மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.