• Sep 20 2024

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு!

Chithra / May 29th 2024, 12:04 pm
image

Advertisement


நாட்டில்   கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கீரி சம்பா விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மொரட்டுவையில் உள்ள பிரபல மொத்த மற்றும் சில்லறை வர்த்தக வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாகும். மில் வைத்திருக்கும் வியாபாரிகள் கீரி சம்பாவை முந்நூறு ரூபாய்க்கு மேல் விற்கின்றனர்.

சம்பா அரிசியின் கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாக உள்ளதால், ஆலைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் அதனை விட அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிக விலைக்கு அரிசி வாங்கி கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாததால், மொத்த விற்பனை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா, சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு நாட்டில்   கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கீரி சம்பா விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக மொரட்டுவையில் உள்ள பிரபல மொத்த மற்றும் சில்லறை வர்த்தக வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாகும். மில் வைத்திருக்கும் வியாபாரிகள் கீரி சம்பாவை முந்நூறு ரூபாய்க்கு மேல் விற்கின்றனர்.சம்பா அரிசியின் கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாக உள்ளதால், ஆலைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் அதனை விட அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அதிக விலைக்கு அரிசி வாங்கி கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாததால், மொத்த விற்பனை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கீரி சம்பா, சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement