• Oct 18 2024

ரயிலில் பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய 6 இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி..!

Chithra / May 19th 2024, 7:38 am
image

Advertisement

 

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த 6 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலை மாணவியொருவருக்கு பலமுறை தொல்லை கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குற்பட்டவர்கள் என்பதோடு அவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயிலில் பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய 6 இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி.  ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த 6 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலை மாணவியொருவருக்கு பலமுறை தொல்லை கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சந்தேகநபர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குற்பட்டவர்கள் என்பதோடு அவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement