• Jun 23 2025

தொழிலுக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கு விசேட அறிவித்தல் - ஜூலை முதல் புதிய நடைமுறை

Chithra / Jun 23rd 2025, 8:02 am
image

சுயாதீனமாக வேலை தேடும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். 

வெளிநாட்டில் சுயாதீனமாக வேலை தேட விரும்பும் ஒருவர் பணியகத்தில் பதிவு செய்வதற்கு முன், குறித்த நபரை வௌிநாட்டிற்கு வரவழைப்பதற்கு எதிர்பார்க்கும் நபர் ஊடாக தேவையான ஆவணங்களை அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சமர்ப்பித்து வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிப்பது கட்டாயமாகும். 

இந்த நடவடிக்கை, புறப்படுவதற்கு முன் ஒப்பந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதன் மூலம், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொழிலாளர் பிரிவுகள் செயல்படும் 13 நாடுகளில் உள்ள 15 இராஜதந்திர சேவை பிரிவுகளுக்கு மட்டுமே இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், இது 2025 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தொழிலுக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கு விசேட அறிவித்தல் - ஜூலை முதல் புதிய நடைமுறை சுயாதீனமாக வேலை தேடும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். வெளிநாட்டில் சுயாதீனமாக வேலை தேட விரும்பும் ஒருவர் பணியகத்தில் பதிவு செய்வதற்கு முன், குறித்த நபரை வௌிநாட்டிற்கு வரவழைப்பதற்கு எதிர்பார்க்கும் நபர் ஊடாக தேவையான ஆவணங்களை அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சமர்ப்பித்து வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிப்பது கட்டாயமாகும். இந்த நடவடிக்கை, புறப்படுவதற்கு முன் ஒப்பந்த வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதன் மூலம், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.முதற்கட்டமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொழிலாளர் பிரிவுகள் செயல்படும் 13 நாடுகளில் உள்ள 15 இராஜதந்திர சேவை பிரிவுகளுக்கு மட்டுமே இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், இது 2025 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement