• Sep 29 2024

நாளை மூடப்படும் பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Chithra / Jun 6th 2024, 5:14 pm
image

Advertisement

  

அரச பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விசேட விடுமுறையாக கருதப்படும் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் வானிலையின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ மாகாண சபை ஏனைய வலயங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை மூடப்படும் பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு   அரச பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விசேட விடுமுறையாக கருதப்படும் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் வானிலையின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சப்ரகமுவ மாகாண சபை ஏனைய வலயங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement