யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் விசேட விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த தேர்த்திருவிழாவில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதன்பிரகாரம், கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் விசேட விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றது.இந்நிலையில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த தேர்த்திருவிழாவில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.இதன்பிரகாரம், கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.