• Apr 27 2024

அவசரமாக கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி..!

Chithra / Mar 1st 2024, 9:24 am
image

Advertisement

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் விசேட கூட்டமொன்றை அவசரமாக நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் தேர்தல், சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மத்தியில் அண்மைய நாட்களாகவே முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

அவசரமாக கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் விசேட கூட்டமொன்றை அவசரமாக நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.எதிர்வரும் தேர்தல், சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மத்தியில் அண்மைய நாட்களாகவே முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement