செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் தெரிவிக்கையில்,
செம்மணியில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான எச்சங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதால், நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கடுமையான குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவுதல், DNA பகுப்பாய்வு மற்றும் கார்பன் டேட்டிங் ஆகியவற்றிற்கான வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தேசிய DNA வங்கியை உருவாக்குதல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.
சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸ்பிரிவினருக்கும் விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்தினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.
செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ், இராணுவம் தலையிட வேண்டாம்; இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்து செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் தெரிவிக்கையில், செம்மணியில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான எச்சங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதால், நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடுமையான குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவுதல், DNA பகுப்பாய்வு மற்றும் கார்பன் டேட்டிங் ஆகியவற்றிற்கான வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தேசிய DNA வங்கியை உருவாக்குதல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது. சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸ்பிரிவினருக்கும் விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்தினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சில நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆணையகம் வலியுறுத்தியுள்ளது.