• Sep 20 2024

இலங்கையை உலுக்கிய கோரம் - மனைவியைக் கொன்றுவிட்டு உயிர்மாய்த்த கணவன்!

Tamil nila / Aug 22nd 2024, 9:36 pm
image

Advertisement

நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேல்ல பிரதேசத்தில் நேற்று முன் தினம் இரவு வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் பெண்ணொருவரை கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். 

சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவராவார்.

இவர்களுக்கு 18 வயதுடைய மகன் மற்றும் 08 வயதுடைய மகளும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பப் பிரச்சினை காரணமாக இவ்வாறு சந்தேக நபர் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொலை செய்ததுடன், தனது மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். 

காயமடைந்த இருவரும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் முன்னதாகவே தாய் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

 பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வீட்டினை சோதனையிட்ட போது 48 வயதுடைய சந்தேக நபர் வீட்டினுள் தூக்கிட்டு தொங்கிய நிலையில்  சடலமாக மீட்கப்பட்டார்.


இலங்கையை உலுக்கிய கோரம் - மனைவியைக் கொன்றுவிட்டு உயிர்மாய்த்த கணவன் நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேல்ல பிரதேசத்தில் நேற்று முன் தினம் இரவு வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் பெண்ணொருவரை கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவராவார்.இவர்களுக்கு 18 வயதுடைய மகன் மற்றும் 08 வயதுடைய மகளும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.குடும்பப் பிரச்சினை காரணமாக இவ்வாறு சந்தேக நபர் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொலை செய்ததுடன், தனது மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். காயமடைந்த இருவரும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் முன்னதாகவே தாய் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.  பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வீட்டினை சோதனையிட்ட போது 48 வயதுடைய சந்தேக நபர் வீட்டினுள் தூக்கிட்டு தொங்கிய நிலையில்  சடலமாக மீட்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement