இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (05) இரவு நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இந்திய இழுவைப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில், அவர்கள் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் சிக்கிய 11 இந்திய மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது.நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (05) இரவு நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இந்திய இழுவைப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில், அவர்கள் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனையடுத்து, மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.