• May 01 2026

தேசபந்துவை பதவி நீக்கும் தீர்மானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Chithra / Aug 6th 2025, 10:26 am
image

 

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா  அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று (06) நாடாளுமன்றில் இடம்பெற்றது.

அந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்த நிலையில் எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்ததது.

இந்நிலையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானம் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ் மா   அதிபர் பதவிக்கான புதியவரின் பெயரை பரிந்துரைப்பார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்துவை பதவி நீக்கும் தீர்மானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு  தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா  அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தினை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று (06) நாடாளுமன்றில் இடம்பெற்றது.அந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்த நிலையில் எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், குறித்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்ததது.இந்நிலையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானம் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதன் பின்னர் ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ் மா   அதிபர் பதவிக்கான புதியவரின் பெயரை பரிந்துரைப்பார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement