• Jun 13 2025

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபா நிவாரணம் - அகமதாபாத் விபத்தையடுத்து டாடா நிறுவனம் அறிவிப்பு...!

shanuja / Jun 13th 2025, 12:10 am
image

குஜராத் - அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபா  நிவாரணம் வழங்கப்படும் என்று  டாடா குழும  தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.


அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம்,  புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. 


விமானத்தில்  242 பயணிகள் பயணித்த நிலையில்  தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று 

மாநில அரசு  தெரிவித்துள்ளது. 


இந்த நிலையிலேயே விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபா  நிவாரணம் வழங்கப்படும் என்று  டாடா குழும  தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.


மேலும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் டாடா நிறுவனம் ஏற்கும் என்றும், விமான விபத்தில் சேதமடைந்த மருத்துவ கல்லூரி விடுதியை சீரமைக்க டாடா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர்   தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபா நிவாரணம் - அகமதாபாத் விபத்தையடுத்து டாடா நிறுவனம் அறிவிப்பு. குஜராத் - அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபா  நிவாரணம் வழங்கப்படும் என்று  டாடா குழும  தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம்,  புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியது. விமானத்தில்  242 பயணிகள் பயணித்த நிலையில்  தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மாநில அரசு  தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபா  நிவாரணம் வழங்கப்படும் என்று  டாடா குழும  தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.மேலும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் டாடா நிறுவனம் ஏற்கும் என்றும், விமான விபத்தில் சேதமடைந்த மருத்துவ கல்லூரி விடுதியை சீரமைக்க டாடா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர்   தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement