• Apr 02 2025

யாழில் மாணவியை தடியால் அடித்த ஆசிரியர் கைது

Chithra / Mar 28th 2025, 2:30 pm
image

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் உள்ள பாடசாலையொன்றில் மாணவி ஒருவருக்கு தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முன்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மாணவர்கள் தமக்குள் வினாத்தாளை பரிமாறி திருத்தும் போது, அடிவாங்கியதாக கூறப்படும் மாணவி, தனது வினாத்தாளை திருத்திய மாணவிக்கு,  பிழையான விடைகளை சரியாக எழுதி திருத்துமாறு கூறியுள்ளார். அந்த மாணவியும் அதனை செய்துள்ளார். 

இதனை அவதானித்த ஆசிரியர் இரு மாணவிகளையும் அழைத்து, கடுமையாக எச்சரித்து, மாணவிகளை தடியால் அடித்து தண்டனை வழங்கியுள்ளார். 

அதில் விடைகளை சரியாக எழுத கூறிய மாணவி வீட்டிற்கு சென்று ஆசிரியர் அடித்த விடயத்தை கூறிய போது, மாணவியின் தாயார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது, மாணவி சிகிச்சை பெறும் அளவுக்கு எதுவும் இல்லை என வைத்தியசாலையில் இருந்து மாணவியை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாணவியின் தாயார் ஆசிரியருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து விசாரணைகளின் பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

யாழில் மாணவியை தடியால் அடித்த ஆசிரியர் கைது யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் உள்ள பாடசாலையொன்றில் மாணவி ஒருவருக்கு தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முன்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.அதனை அடுத்து மாணவர்கள் தமக்குள் வினாத்தாளை பரிமாறி திருத்தும் போது, அடிவாங்கியதாக கூறப்படும் மாணவி, தனது வினாத்தாளை திருத்திய மாணவிக்கு,  பிழையான விடைகளை சரியாக எழுதி திருத்துமாறு கூறியுள்ளார். அந்த மாணவியும் அதனை செய்துள்ளார். இதனை அவதானித்த ஆசிரியர் இரு மாணவிகளையும் அழைத்து, கடுமையாக எச்சரித்து, மாணவிகளை தடியால் அடித்து தண்டனை வழங்கியுள்ளார். அதில் விடைகளை சரியாக எழுத கூறிய மாணவி வீட்டிற்கு சென்று ஆசிரியர் அடித்த விடயத்தை கூறிய போது, மாணவியின் தாயார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது, மாணவி சிகிச்சை பெறும் அளவுக்கு எதுவும் இல்லை என வைத்தியசாலையில் இருந்து மாணவியை அனுப்பியுள்ளனர்.அதன் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாணவியின் தாயார் ஆசிரியருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து விசாரணைகளின் பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement