• Jul 27 2024

தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்...! ரயில் பாதைக்கு அருகில் மர்ம மரணம்

Chithra / May 27th 2024, 3:26 pm
image

Advertisement

 

கம்பஹா - மீரிகம பிரதேசத்தில் ரயில் பாதைக்கு அருகிலிருந்து தலையில் பலத்த காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று  மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.  

மீரிகம, வில்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்திம லக்மால் பெரேரா என்ற 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர் நேற்று (26) தானம் வழங்கும் நிகழ்வொன்றிற்கு சென்றுள்ள நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை என இவரது தந்தை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

உயிரிழந்தவரது சடலமானது அவரது வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள ரயில் பாதைக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம். ரயில் பாதைக்கு அருகில் மர்ம மரணம்  கம்பஹா - மீரிகம பிரதேசத்தில் ரயில் பாதைக்கு அருகிலிருந்து தலையில் பலத்த காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று  மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.  மீரிகம, வில்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்திம லக்மால் பெரேரா என்ற 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் நேற்று (26) தானம் வழங்கும் நிகழ்வொன்றிற்கு சென்றுள்ள நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை என இவரது தந்தை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.உயிரிழந்தவரது சடலமானது அவரது வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள ரயில் பாதைக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement