திருகோணமலையில் இன்று (11) காலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்தின் பின்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதுடன் பலத்த சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலையில் பயங்கர விபத்து – பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஒருவர் படுகாயம் திருகோணமலையில் இன்று (11) காலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேருந்தின் பின்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதுடன் பலத்த சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.