• Oct 06 2024

நாட்டையே அதிர வைத்துள்ள தலைமன்னார் சிறுமி படுகொலை - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

Tamil nila / Feb 17th 2024, 7:59 pm
image

Advertisement

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுததியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று (17)  அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில்  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் இன்றைய தினம் (17)​ மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் .

இதன் போது  மன்னார் மாவட்ட பதில் நீதவான் எஸ்.ஜெபநேசன் லோகு,  பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு அமைய குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில்  அழைத்துச் செல்லப்பட்டார்.

இதே வேளை  இன்றைய தினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் சடலம்  காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அத்துடன் பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன், குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

நாட்டையே அதிர வைத்துள்ள தலைமன்னார் சிறுமி படுகொலை - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு. தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுததியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று (17)  அனுமதி வழங்கியுள்ளது.அதாவது தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில்  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் இன்றைய தினம் (17)​ மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் .இதன் போது  மன்னார் மாவட்ட பதில் நீதவான் எஸ்.ஜெபநேசன் லோகு,  பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு அமைய குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில்  அழைத்துச் செல்லப்பட்டார்.இதே வேளை  இன்றைய தினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் சடலம்  காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அத்துடன் பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன், குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement