• Sep 20 2024

20 வருடங்கள் பழமையான திருநாவுக்கரசரின் சிலை உடைப்பு!

Anaath / Sep 15th 2024, 10:26 am
image

Advertisement

யாழில் திருநாவுக்கரசு நாயனார் உடைய திருவுருவச்சிலையானது சமூக விரோதிகளால் தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் உள்ள  சுமார் 20 வருடங்கள் பழமை வாய்ந்த திருநாவுக்கரசு நாயனார் உடைய திருவுருவச்சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாடசாலை சமூகத்தினர் கோட்டக்கல்வி அலுவலகத்தினரிடமும் வலயக் கல்வி அலுவலகத்தினரிடமும் அறிவித்து  கொடிகாமம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் பழைய மாணவன்  துரைசிங்கம் குமரநாதனால் இலவசமாக நிர்மாணிக்கப்பட்டு அவரது தந்தையார்  அன்பளிப்பாக வழங்கிய திருவுருவச்சிலையானது இடித்து சேதப்படுத்தப்பட்டமை கவலைக்குரிய விடயமாக கருதப்படுகிறது.

20 வருடங்கள் பழமையான திருநாவுக்கரசரின் சிலை உடைப்பு யாழில் திருநாவுக்கரசு நாயனார் உடைய திருவுருவச்சிலையானது சமூக விரோதிகளால் தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் உள்ள  சுமார் 20 வருடங்கள் பழமை வாய்ந்த திருநாவுக்கரசு நாயனார் உடைய திருவுருவச்சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாடசாலை சமூகத்தினர் கோட்டக்கல்வி அலுவலகத்தினரிடமும் வலயக் கல்வி அலுவலகத்தினரிடமும் அறிவித்து  கொடிகாமம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.கடந்த 2004 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் பழைய மாணவன்  துரைசிங்கம் குமரநாதனால் இலவசமாக நிர்மாணிக்கப்பட்டு அவரது தந்தையார்  அன்பளிப்பாக வழங்கிய திருவுருவச்சிலையானது இடித்து சேதப்படுத்தப்பட்டமை கவலைக்குரிய விடயமாக கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement