குஜராத் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் அசண்டையீனம் தான் காரணம் என்று சுட்டிக்காட்டி அமெரிக்கா ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்குழுவில் இருந்த அமெரிக்க நிபுணர்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் அடிப்படையில் இது தெரியவந்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை நிறுவனம் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அதில் விபத்துக்கு சில நொடிகள் முன் எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த இணை பைலட் ஏன் ஸ்விட்சை அணைத்தீர்கள் என கேட்டதாக கூறப்பட்டுள்ளது .காரணமான எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை கேப்டன் அணைத்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் பைலட் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததாகவும் இதன்மூலம் விபத்திற்கு பைலட் சுமீத் சபர்வால் காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள ட்டுரைக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இந்த அறிக்கை சரிபார்க்கப்படாதது. இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டும். ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பெறவே சோதனை நடைபெற்றுள்ளது.
இந்தச் சோதனை இன்னும் முழுமையடையவில்லை. சர்வதேச ஊடகங்கள் சில, சரிபார்க்கப்படாத அறிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் முடிவுகளை எடுக்க முயற்சிப்பதும், குறிப்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இதுபோன்ற நடவடிக்கைகள் பொறுப்பற்றவைகளாகும். இந்திய விமான விபத்து புலனாய்வு பிரிவின் நேர்மையை குறைத்து மதிப்பிட்டு, கட்டுக் கதைகள் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 241 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து இந்தியாவை மட்டுமன்றி உலகத்தையே உலுக்கியது.
விமானியின் அசண்டையீனத்தாலே ஏர் இந்தியா விமானம் நொருங்கியது - குற்றஞ்சாட்டிய அமெரிக்கா குஜராத் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் அசண்டையீனம் தான் காரணம் என்று சுட்டிக்காட்டி அமெரிக்கா ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்குழுவில் இருந்த அமெரிக்க நிபுணர்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் அடிப்படையில் இது தெரியவந்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை நிறுவனம் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் விபத்துக்கு சில நொடிகள் முன் எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த இணை பைலட் ஏன் ஸ்விட்சை அணைத்தீர்கள் என கேட்டதாக கூறப்பட்டுள்ளது .காரணமான எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை கேப்டன் அணைத்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் பைலட் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததாகவும் இதன்மூலம் விபத்திற்கு பைலட் சுமீத் சபர்வால் காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பத்திரிகை வெளியிட்டுள்ள ட்டுரைக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இந்த அறிக்கை சரிபார்க்கப்படாதது. இறுதி அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டும். ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பெறவே சோதனை நடைபெற்றுள்ளது.இந்தச் சோதனை இன்னும் முழுமையடையவில்லை. சர்வதேச ஊடகங்கள் சில, சரிபார்க்கப்படாத அறிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் முடிவுகளை எடுக்க முயற்சிப்பதும், குறிப்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இதுபோன்ற நடவடிக்கைகள் பொறுப்பற்றவைகளாகும். இந்திய விமான விபத்து புலனாய்வு பிரிவின் நேர்மையை குறைத்து மதிப்பிட்டு, கட்டுக் கதைகள் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 241 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து இந்தியாவை மட்டுமன்றி உலகத்தையே உலுக்கியது.