• Aug 03 2025

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தலவில் புனித அன்னமாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

Chithra / Aug 3rd 2025, 3:44 pm
image


புத்தளம் கற்பிட்டி தலவில் புனித அன்னமாள் வருடாந்த ஆடி மாதத் திருவிழா கடந்த மாதம் 27ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து நடைப்பெற்றன.

சிலாபம் மறை மாவட்ட ஆயர் விமல்சிரி ஜயசூரிய ஆண்டகை திருப்பலியை கூட்டாக ஒப்புகொடுத்தார். 

திருப்பலியை தொடர்ந்து புனித அன்னமாளின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. 

இதில் ஆயர்கள் குருக்கள் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பல மாவட்டங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைத்தந்து 263வது வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் திருவிழா இடம்பெற்றது.


பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தலவில் புனித அன்னமாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா புத்தளம் கற்பிட்டி தலவில் புனித அன்னமாள் வருடாந்த ஆடி மாதத் திருவிழா கடந்த மாதம் 27ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து நடைப்பெற்றன.சிலாபம் மறை மாவட்ட ஆயர் விமல்சிரி ஜயசூரிய ஆண்டகை திருப்பலியை கூட்டாக ஒப்புகொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து புனித அன்னமாளின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. இதில் ஆயர்கள் குருக்கள் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது பல மாவட்டங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைத்தந்து 263வது வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் திருவிழா இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement