• May 18 2024

தென்னிலங்கையில் பரபரப்பு...! துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பௌத்த பிக்கு உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Jan 23rd 2024, 1:42 pm
image

Advertisement

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள கஹட்டன கனராம மகா விகாரைக்கு காரில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 44 வயதுடைய தேரர்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, நேற்றையதினம் மாத்தறை - பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




தென்னிலங்கையில் பரபரப்பு. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பௌத்த பிக்கு உயிரிழப்பு.samugammedia கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள கஹட்டன கனராம மகா விகாரைக்கு காரில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 44 வயதுடைய தேரர்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.அதேவேளை, நேற்றையதினம் மாத்தறை - பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement