கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்று இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
முருகப்பெருமானுக்கும் சூர பத்மனுக்கும் இடையில் நடந்த போரின்போது முருகப்பெருமான் வீசிய வேல் ஆறு கூறுகளாக பிரிந்து சென்று சூரனை வதம் செய்ததாகவும் அவற்றில் ஒருவேல் கதிர்காமத்திலும், ஒரு வேல் மண்டூரிலும் தங்கியதாக கர்ணபரம்பரைக் கதைகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்ற சோழ பரம்பரையில் வந்த சீர்பாததேவியினால் கொண்டுவரப்பட்ட வேலை அவருடன் வந்த ஒருவர் எடுத்துவந்து இங்கு ஒழித்துவைத்து அதனை வேடர்கள் கண்டு வழிபட்டதாகவும் கூறப்படுகின்றது.
கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு நடைபெறுகின்றது.
நேற்று இரவு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் கொடியேற்றம் தொடர்பான செய்தி வாசிக்கப்பட்டதை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமானது.
விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று அங்கிருந்து கொடித்தம்பம் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பூஜைகளுடன் ஆலயத்தின் உட்பகுதியில் கொடியேற்றம் செய்யப்பட்டது.
ஆலயத்தில் கொன்றை மரங்களைக்கொண்டு இந்த கொடியேற்றம் செய்யப்பட்டது.
இருபது தினங்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெறவுள்ளது.
நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்று இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.முருகப்பெருமானுக்கும் சூர பத்மனுக்கும் இடையில் நடந்த போரின்போது முருகப்பெருமான் வீசிய வேல் ஆறு கூறுகளாக பிரிந்து சென்று சூரனை வதம் செய்ததாகவும் அவற்றில் ஒருவேல் கதிர்காமத்திலும், ஒரு வேல் மண்டூரிலும் தங்கியதாக கர்ணபரம்பரைக் கதைகள் தெரிவிக்கின்றன.அதேபோன்ற சோழ பரம்பரையில் வந்த சீர்பாததேவியினால் கொண்டுவரப்பட்ட வேலை அவருடன் வந்த ஒருவர் எடுத்துவந்து இங்கு ஒழித்துவைத்து அதனை வேடர்கள் கண்டு வழிபட்டதாகவும் கூறப்படுகின்றது.கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு நடைபெறுகின்றது.நேற்று இரவு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் கொடியேற்றம் தொடர்பான செய்தி வாசிக்கப்பட்டதை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமானது.விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று அங்கிருந்து கொடித்தம்பம் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பூஜைகளுடன் ஆலயத்தின் உட்பகுதியில் கொடியேற்றம் செய்யப்பட்டது.ஆலயத்தில் கொன்றை மரங்களைக்கொண்டு இந்த கொடியேற்றம் செய்யப்பட்டது.இருபது தினங்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெறவுள்ளது.நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.