• Apr 15 2026

நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பல் - நாளை முதல் விநியோகம்

Chithra / Feb 22nd 2026, 1:54 pm
image


3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளது.


குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை இன்றிரவு விநியோக பிரிவுக்கு கையளிக்கவுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன ஜயவர்தன தெரிவித்தார்.


அதன்படி, நாடளாவிய ரீதியில் நாளை முதல் தொடர்ச்சியாக எரிவாயு கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


இந்த நிலையில், போதுமான அளவு எரிவாயு கொள்கலன்கள் இன்மையே, எரிவாயு தட்டுப்பாட்டுக்கு காரணம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பல் - நாளை முதல் விநியோகம் 3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளது.குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள எரிவாயுவை இன்றிரவு விநியோக பிரிவுக்கு கையளிக்கவுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன ஜயவர்தன தெரிவித்தார்.அதன்படி, நாடளாவிய ரீதியில் நாளை முதல் தொடர்ச்சியாக எரிவாயு கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த நிலையில், போதுமான அளவு எரிவாயு கொள்கலன்கள் இன்மையே, எரிவாயு தட்டுப்பாட்டுக்கு காரணம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement