களனிவெளி தொடருந்து பாதையை, அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை நீடிக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது மற்றும் தொடருந்து இணைப்பை வலுப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்டத்தைத் தயாரிக்க இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பப் பணிகளுக்காக, 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட பழைய தொடருந்து பாதைக்கு இணையாகவே புதிய பாதை அமைக்கப்படவுள்ளது.
களனிவெளி தொடருந்து பாதை நீடிப்புக்கு அரசாங்கம் பச்சைக்கொடி களனிவெளி தொடருந்து பாதையை, அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை நீடிக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது மற்றும் தொடருந்து இணைப்பை வலுப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்டத்தைத் தயாரிக்க இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பப் பணிகளுக்காக, 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட பழைய தொடருந்து பாதைக்கு இணையாகவே புதிய பாதை அமைக்கப்படவுள்ளது.