இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் வீட்டின் கதவு வேலிகள் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் நேற்று மதியம் வீதியோரமாக நின்ற மரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் வேலியின் தகரங்கள் சேதமடைந்தமையுடன் மற்றைய வீடு ஒன்றின் பிரதான வாயில் கதவும் சேதமடைந்துள்ளது
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தர்மகுணசிங்கம் சுஜீவன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் மின்சார சபைக்கு வழங்கிய தகவலையடுத்து மின்சார சபையினர் மின்சார தடையினை நிவர்த்தி செய்தமையுடன் பிரதேச சபையினர் மரத்தினை அகற்றி போக்குவரத்தினையும் சீரமைத்தனர்
இதேவேளை கொழும்பில் கடும் காற்று மழையால் தெமட்டகொடையில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஆறு வீடுகள் சேதமடைந்தன.
அதேநேரம், மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் சாலையில் பயணித்த வாகனங்களும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதை சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் காட்டுகின்றன.
பலத்த காற்று காரணமாக கடலோர, பிரதான, சிலாபம் மற்றும் களனிவெளி உள்ளிட்ட அனைத்து ரயில் பாதைகளிலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் முறிந்து விழுந்துள்ளன.
அவற்றை அகற்ற குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை சூழ்ந்த பேய் காற்று; சேதமடைந்த வீடுகள், போக்குவரத்தும் தடை இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் வீட்டின் கதவு வேலிகள் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.அந்தவகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் நேற்று மதியம் வீதியோரமாக நின்ற மரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் வேலியின் தகரங்கள் சேதமடைந்தமையுடன் மற்றைய வீடு ஒன்றின் பிரதான வாயில் கதவும் சேதமடைந்துள்ளதுஇவ்விடயம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தர்மகுணசிங்கம் சுஜீவன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் மின்சார சபைக்கு வழங்கிய தகவலையடுத்து மின்சார சபையினர் மின்சார தடையினை நிவர்த்தி செய்தமையுடன் பிரதேச சபையினர் மரத்தினை அகற்றி போக்குவரத்தினையும் சீரமைத்தனர்இதேவேளை கொழும்பில் கடும் காற்று மழையால் தெமட்டகொடையில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஆறு வீடுகள் சேதமடைந்தன.அதேநேரம், மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் சாலையில் பயணித்த வாகனங்களும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதை சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் காட்டுகின்றன.பலத்த காற்று காரணமாக கடலோர, பிரதான, சிலாபம் மற்றும் களனிவெளி உள்ளிட்ட அனைத்து ரயில் பாதைகளிலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்ற குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.