• May 20 2024

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் தேவையற்றது...! தமிழ் மக்கள் ஆதரவு என்றும் ரணிலுக்கே...! வஜிர நம்பிக்கை...!

Sharmi / May 9th 2024, 10:06 am
image

Advertisement

தமிழ் அரசியல்வாதிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கினாலும் தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் விரும்புகின்ற தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார். 

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற நிலையில்இ தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்? இந்த விடயத்தில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்? எனவும் கேள்வியெழுப்பினார்.

அதேவேளை, நடக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும். 

அதைவிடுத்து மக்கள் விரும்பாத சாத்தியம் இல்லாத விடயங்கள் தொடர்பில் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது. 

அந்தவகையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும் தேவையற்ற ஒன்று.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் என்ன தீர்மானம் எடுத்தாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தமிழ் மக்கள் ஆதரவு  வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.


தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் தேவையற்றது. தமிழ் மக்கள் ஆதரவு என்றும் ரணிலுக்கே. வஜிர நம்பிக்கை. தமிழ் அரசியல்வாதிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கினாலும் தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் மக்கள் விரும்புகின்ற தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார். இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற நிலையில்இ தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் வேண்டும் இந்த விடயத்தில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.அதேவேளை, நடக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து மக்கள் விரும்பாத சாத்தியம் இல்லாத விடயங்கள் தொடர்பில் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது. அந்தவகையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும் தேவையற்ற ஒன்று.தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் என்ன தீர்மானம் எடுத்தாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தமிழ் மக்கள் ஆதரவு  வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement