இந்தியா - தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் எரிபொருள் இன்றி காற்றின் வேகம் காரணமாக இலங்கை அனலைத்தீவு கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி கிராமத்தில் இருந்து நேற்று பைபர் படகில் புதுக்கோட்டை சேர்ந்த ராஜா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த குமார், கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த முரளி ஆகிய மூவர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களது படகிலிருந்து எரிபொருள் முடிந்தததன் காரணமாக படகு காற்றின் வேகம் காரணமாக யாழ்ப்பாணம் -அனலைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியது.
இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள், இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மற்றும் அனலைத்தீவு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த அனலைத்தீவு பொலிசார் மூவரையும் அனலைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருள் இன்றி மீனவர்கள் மூவரும் அனலைத்தீவு கடற்பரப்பில் தஞ்சமடைந்தது, அனலைத்தீவு பொலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, மூவரும் நீதிமன்றத்தின் ஊடாக சிறை தண்டனையின்றி படகுடன் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடுக்கடலில் எரிபொருள் தீர்ந்ததால் நடந்த அவலம்; தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்பரப்பில் தஞ்சம் இந்தியா - தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் எரிபொருள் இன்றி காற்றின் வேகம் காரணமாக இலங்கை அனலைத்தீவு கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி கிராமத்தில் இருந்து நேற்று பைபர் படகில் புதுக்கோட்டை சேர்ந்த ராஜா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த குமார், கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த முரளி ஆகிய மூவர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களது படகிலிருந்து எரிபொருள் முடிந்தததன் காரணமாக படகு காற்றின் வேகம் காரணமாக யாழ்ப்பாணம் -அனலைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியது.இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள், இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மற்றும் அனலைத்தீவு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவல் அறிந்த அனலைத்தீவு பொலிசார் மூவரையும் அனலைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.எரிபொருள் இன்றி மீனவர்கள் மூவரும் அனலைத்தீவு கடற்பரப்பில் தஞ்சமடைந்தது, அனலைத்தீவு பொலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, மூவரும் நீதிமன்றத்தின் ஊடாக சிறை தண்டனையின்றி படகுடன் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.