• May 20 2024

எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல் அப்பளம் போன்றது...! ஜனாதிபதி ரணில் கிண்டல்...! samugammedia

Sharmi / Jan 27th 2024, 11:00 am
image

Advertisement

இன்று எமது அரசியல் அப்பளத்தை போலவே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

'நாட்டின் பிரச்சினைகள் தொடர்பிலும், நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தொடர்பி லும் அனைத்துத்தரப்பினரும் சிந்தித்துச் மேற்கொள் செயற்படவேண்டும். ஆனால் இன்றும் எமது அரசியல், அப்பளத்தை போலவே உள்ளது. பொரித்தவுடன் அதனை எடுத்து சாப்பிடுகிறோம். மறுதினம் மற்றொன்றை முகாமைத் போடுகிறோம் பின்னர் அதனை மறந்து விடுவோம்.

சமூக ஊடகங்கள் தொடர்பிலான சட்டம் கொண்டுவரப்பட்டபோது நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது எனக் கூச்சலிட்டனர். இருப்பினும் சட்டம் நிறை வேற்றப்பட்டது. தற்போது அதனை அனைவரும் மறந்துவிட்டனர். அதே போல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்போதும் மக்களின் உரிமை மீறப்படுகிறது. அனைவரையும் சிறையில் அடைக்கப் போகிறார்கள் எனக் கூச்சலிடுவர். பின்னர் அதை மறந்துவிடுவார்கள்.

அதன் பின்னர் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்ட வரைவு சமர்ப்பிக்கப்படும்போது கல்வி ஒழிக்கப்படுவதாக கூச்சலிடுவர். பின்னர் மறந்துவிடுவார்கள். அப்பளத்தை போல் மேலே வந்த பின்னர் சத்தம் குறைந்துவிடும். இந்த அரசியலுக்கு என்னால் முடிவு கட்டமுடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல் அப்பளம் போன்றது. ஜனாதிபதி ரணில் கிண்டல். samugammedia இன்று எமது அரசியல் அப்பளத்தை போலவே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  'நாட்டின் பிரச்சினைகள் தொடர்பிலும், நாணய நிதியத்தின் ஒப்பந்தம் தொடர்பி லும் அனைத்துத்தரப்பினரும் சிந்தித்துச் மேற்கொள் செயற்படவேண்டும். ஆனால் இன்றும் எமது அரசியல், அப்பளத்தை போலவே உள்ளது. பொரித்தவுடன் அதனை எடுத்து சாப்பிடுகிறோம். மறுதினம் மற்றொன்றை முகாமைத் போடுகிறோம் பின்னர் அதனை மறந்து விடுவோம்.சமூக ஊடகங்கள் தொடர்பிலான சட்டம் கொண்டுவரப்பட்டபோது நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது எனக் கூச்சலிட்டனர். இருப்பினும் சட்டம் நிறை வேற்றப்பட்டது. தற்போது அதனை அனைவரும் மறந்துவிட்டனர். அதே போல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போதும் மக்களின் உரிமை மீறப்படுகிறது. அனைவரையும் சிறையில் அடைக்கப் போகிறார்கள் எனக் கூச்சலிடுவர். பின்னர் அதை மறந்துவிடுவார்கள். அதன் பின்னர் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்ட வரைவு சமர்ப்பிக்கப்படும்போது கல்வி ஒழிக்கப்படுவதாக கூச்சலிடுவர். பின்னர் மறந்துவிடுவார்கள். அப்பளத்தை போல் மேலே வந்த பின்னர் சத்தம் குறைந்துவிடும். இந்த அரசியலுக்கு என்னால் முடிவு கட்டமுடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement