• May 19 2025

தேசிய போர் வீரர் நினைவு விழாவில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்க வேண்டும்! மொட்டு கட்சி அழைப்பு

Chithra / May 19th 2025, 8:33 am
image

 

தேசிய போர்வீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக்கொள்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய போர்வீரர் தின நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்றும் அது தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களின் பெயரில் ஜனாதிபதி செய்த ஒரு பெரிய தவறு என்றும் அவர் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தவுடன், போரை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் தனி விழாவை நடத்த அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது, மேலும் அந்தக் கோரிக்கை அமைச்சினால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஒரு தேசிய கடமையாக, நாளை (20) மாலை 5.00 மணிக்கு போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் ஒரு போர்வீரர் நினைவேந்தலை நடத்த தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்வார் என்பதை ரணவிரு சேவா அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.


தேசிய போர் வீரர் நினைவு விழாவில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்க வேண்டும் மொட்டு கட்சி அழைப்பு  தேசிய போர்வீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக்கொள்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.தேசிய போர்வீரர் தின நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்றும் அது தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களின் பெயரில் ஜனாதிபதி செய்த ஒரு பெரிய தவறு என்றும் அவர் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.அரச தலைவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தவுடன், போரை முடிவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் தனி விழாவை நடத்த அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது, மேலும் அந்தக் கோரிக்கை அமைச்சினால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.இருப்பினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஒரு தேசிய கடமையாக, நாளை (20) மாலை 5.00 மணிக்கு போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் ஒரு போர்வீரர் நினைவேந்தலை நடத்த தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்வார் என்பதை ரணவிரு சேவா அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement