• May 20 2024

மதுவால் வந்த வினை..! நண்பனை கல்லால் தாக்கி கொன்ற நபர்..! இலங்கையில் கொடூரம்

Chithra / Jan 13th 2024, 3:24 pm
image

Advertisement



காலி - நெலுவ, தும்மலஹேன பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று   (12) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் நெலுவ, தும்மலஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.

இவர் நேற்று (12) தனது நண்பருடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளை  இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது சந்தேக நபர் கல்லால் தாக்கியதில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை நெலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுவால் வந்த வினை. நண்பனை கல்லால் தாக்கி கொன்ற நபர். இலங்கையில் கொடூரம் காலி - நெலுவ, தும்மலஹேன பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று   (12) இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் நெலுவ, தும்மலஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.இவர் நேற்று (12) தனது நண்பருடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளை  இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.இதன்போது சந்தேக நபர் கல்லால் தாக்கியதில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை நெலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement