• Jun 27 2025

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி: தேசிய மக்கள் சக்தி வெளி நடப்பு!

Chithra / Jun 27th 2025, 12:22 pm
image

 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர் ,உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்  தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று  காலை நடைபெற்றது. 

தவிசாளர் தெரிவுக்காக தமிழரசுக் கட்சியின் பாலேந்திரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கார்த்தீபன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்திருந்தனர். 

சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17 பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர்.

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப் பெற்றது. 

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் 3 வாக்குகளும், ஜனநாயக தேசிய கூட்டணியின் 2 வாக்குகளும், ஈபிடிபியின் ஒரு வாக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்கும், சுயேட்சைக் குழுவின் ஒரு வாக்குமாக 17 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து  உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சங்கு கூட்டணியின் கோணேஸ்வரி உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். 

இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிசாளர் தெரிவின் போது நடுநிலமை வகித்திருந்தார்.



வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி: தேசிய மக்கள் சக்தி வெளி நடப்பு  வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர் ,உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்  தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று  காலை நடைபெற்றது. தவிசாளர் தெரிவுக்காக தமிழரசுக் கட்சியின் பாலேந்திரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கார்த்தீபன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்திருந்தனர். சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17 பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர்.அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப் பெற்றது. அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் 3 வாக்குகளும், ஜனநாயக தேசிய கூட்டணியின் 2 வாக்குகளும், ஈபிடிபியின் ஒரு வாக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்கும், சுயேட்சைக் குழுவின் ஒரு வாக்குமாக 17 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது. இதனையடுத்து  உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சங்கு கூட்டணியின் கோணேஸ்வரி உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை தமிழ் மக்கள் கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிசாளர் தெரிவின் போது நடுநிலமை வகித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement