• Jul 22 2026

ஈரானில் புதிய இலக்குகளை துவம்சம் செய்த அமெரிக்கா

Ziya / Jul 20th 2026, 3:24 pm
image

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் பல்வேறு நகரங்களில் அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது


ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், நாட்டின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. 


வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள தப்ரிஸ் நகரமும் இந்தத் தாக்குதல்களில் முதல் முறையாக இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தப்ரிஸ் நகரில் மூன்று பெரிய வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதனிடையே, அமெரிக்கத் தாக்குதல்கள் தொடரும் வரை பதிலடி நடவடிக்கைகள் தொடரும் என ஈரான் எச்சரித்துள்ளது.


ஈரானின் பாதுகாப்புக் கோட்பாட்டின் அடிப்படையில், அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி வழங்கப்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) உறுதிப்படுத்தியுள்ளது.


குறிப்பாக, ஜோர்டான் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஐ.ஆர்.ஜி.சி. தகவல் வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவின் புதிய வான்வழித் தாக்குதல்களும், அதற்கு ஈரான் மேற்கொண்டு வரும் பதிலடி நடவடிக்கைகளும் மத்திய கிழக்கில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

ஈரானில் புதிய இலக்குகளை துவம்சம் செய்த அமெரிக்கா ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் பல்வேறு நகரங்களில் அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், நாட்டின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள தப்ரிஸ் நகரமும் இந்தத் தாக்குதல்களில் முதல் முறையாக இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தப்ரிஸ் நகரில் மூன்று பெரிய வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அமெரிக்கத் தாக்குதல்கள் தொடரும் வரை பதிலடி நடவடிக்கைகள் தொடரும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரானின் பாதுகாப்புக் கோட்பாட்டின் அடிப்படையில், அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி வழங்கப்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) உறுதிப்படுத்தியுள்ளது.குறிப்பாக, ஜோர்டான் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஐ.ஆர்.ஜி.சி. தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் புதிய வான்வழித் தாக்குதல்களும், அதற்கு ஈரான் மேற்கொண்டு வரும் பதிலடி நடவடிக்கைகளும் மத்திய கிழக்கில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement