• Jun 25 2025

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

shanuja / Jun 25th 2025, 9:11 am
image

இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளதால்  நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 


எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளோம். எந்த காரணத்தாலும் இந்த நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளுக்கு  தட்டுப்பாடு ஏற்படாது. 

 


தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . 


எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, 92 ஒக்டேன் பெற்றோலில் பெரும்பாலானவை போர் நடைபெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.


அந்த எண்ணெய் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எங்களுக்கு வருகிறது. ஓமானிலிருந்து ஒன்று மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. 


ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டாலும், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதன்  விற்பனையாளர்களிடம் கலந்துரையாடி  எரிபொருள் இறக்குமதியை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளோம்.- என்றார்.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளதால்  நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளோம். எந்த காரணத்தாலும் இந்த நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளுக்கு  தட்டுப்பாடு ஏற்படாது.  தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் . எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, 92 ஒக்டேன் பெற்றோலில் பெரும்பாலானவை போர் நடைபெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.அந்த எண்ணெய் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எங்களுக்கு வருகிறது. ஓமானிலிருந்து ஒன்று மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டாலும், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதன்  விற்பனையாளர்களிடம் கலந்துரையாடி  எரிபொருள் இறக்குமதியை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளோம்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement