• Apr 22 2025

முல்லைத்தீவு copcity இல் திருடிய ஐபோனை facebook பதிவிலிட்டு மாட்டிய திருடன்

Thansita / Apr 21st 2025, 7:52 pm
image

திருட்டுடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம்  ஒன்று  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம்  தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது.

முல்லைத்தீவு copcity இல்  கடந்த  17ஆம் திகதி கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான apple i phone கையடக்க தொலைபேசி ஒன்றும் , 52,000 ரூபாய்  பணமும்  திருடப்பட்டுள்ளது. அதனையடுத்து  குறித்த  வங்கி நிர்வகத்தினரால்   முல்லைத்தீவு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து  குறித்த  copcity இல்  பொருத்தப்பட்ட  கண்காணிப்பு கருவியின்  உதவியுடன் குறித்த திருடன் பிடிக்கப்பட்டுள்ளார். திருடியதாக கூறப்படும் சந்தேகநபர்   குறித்த அப்பிள் அதி திறன் பேசியின் படத்தை  முகநூலில் பதிவிட்டு தன்னிடம் i phone இருப்பதாக வெளிக்காட்டியுள்ளார். குறித்த பதிவையும்  cctv காட்சிகளையும்  அடிப்படையாகக் கொண்டு   நேற்றையதினம் (20.04.2025)  குறித்த திருட்டுடன்  தொடர்புடைய  சந்தேக நபர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  கொக்குளாய் பகுதியினை  சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார். அத்துடன்  குறித்த சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை  கொக்குளாய் பொலிஸார்  மேற்காெண்டு வருகிறார்கள்.

முல்லைத்தீவு copcity இல் திருடிய ஐபோனை facebook பதிவிலிட்டு மாட்டிய திருடன் திருட்டுடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம்  ஒன்று  இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம்  தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது.முல்லைத்தீவு copcity இல்  கடந்த  17ஆம் திகதி கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான apple i phone கையடக்க தொலைபேசி ஒன்றும் , 52,000 ரூபாய்  பணமும்  திருடப்பட்டுள்ளது. அதனையடுத்து  குறித்த  வங்கி நிர்வகத்தினரால்   முல்லைத்தீவு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டிருந்தது.அதனையடுத்து  குறித்த  copcity இல்  பொருத்தப்பட்ட  கண்காணிப்பு கருவியின்  உதவியுடன் குறித்த திருடன் பிடிக்கப்பட்டுள்ளார். திருடியதாக கூறப்படும் சந்தேகநபர்   குறித்த அப்பிள் அதி திறன் பேசியின் படத்தை  முகநூலில் பதிவிட்டு தன்னிடம் i phone இருப்பதாக வெளிக்காட்டியுள்ளார். குறித்த பதிவையும்  cctv காட்சிகளையும்  அடிப்படையாகக் கொண்டு   நேற்றையதினம் (20.04.2025)  குறித்த திருட்டுடன்  தொடர்புடைய  சந்தேக நபர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  கொக்குளாய் பகுதியினை  சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார். அத்துடன்  குறித்த சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை  கொக்குளாய் பொலிஸார்  மேற்காெண்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement