• Sep 20 2024

மூன்றாவது மீளாய்வு முடிவு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்! – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

IMF
Chithra / Aug 3rd 2024, 1:08 pm
image

Advertisement

 

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் விரிவான நிதி வசதித் திட்டம் தொடர்பான மூன்றாவது மீளாய்வின் காலம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் படி, 

அதன் சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் கடந்த 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார மற்றும் நிதி அறிமுகம் குறித்து கலந்துரையாடினர்.

இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொடர்ச்சியான மூன்று காலாண்டு வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், வருவாய் சேகரிப்பில் வளர்ச்சி மற்றும் வெளி கையிருப்புகளை கட்டியெழுப்புதல் ஆகியவற்றுடன் மீட்சிக்கு உதவியுள்ளன என்பவை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது 2025ல் வருவாயை வலுப்படுத்த உதவும் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2025க்குள், ஏற்றுமதியாளர்களுக்கு VAT வரியை திரும்பப் பெறும் முறையை நிறுவுதல் உள்ளிட்ட வரி நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் நிலைமையை மேலும் மேம்படுத்த முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூன்றாவது மீளாய்வு முடிவு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு  ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் விரிவான நிதி வசதித் திட்டம் தொடர்பான மூன்றாவது மீளாய்வின் காலம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் படி, அதன் சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் கடந்த 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார மற்றும் நிதி அறிமுகம் குறித்து கலந்துரையாடினர்.இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொடர்ச்சியான மூன்று காலாண்டு வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், வருவாய் சேகரிப்பில் வளர்ச்சி மற்றும் வெளி கையிருப்புகளை கட்டியெழுப்புதல் ஆகியவற்றுடன் மீட்சிக்கு உதவியுள்ளன என்பவை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது 2025ல் வருவாயை வலுப்படுத்த உதவும் என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது.ஏப்ரல் 2025க்குள், ஏற்றுமதியாளர்களுக்கு VAT வரியை திரும்பப் பெறும் முறையை நிறுவுதல் உள்ளிட்ட வரி நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் நிலைமையை மேலும் மேம்படுத்த முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement