• Oct 25 2024

இஸ்ரேலிய பிரஜைகளைத் தாக்குவதற்கு திட்டமிட்ட மூவரிடம் விசாரணை! - விஜித ஹேரத்

Chithra / Oct 24th 2024, 4:40 pm
image

Advertisement

 

அறுகம்பே பகுதியில் இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் தற்போது மூன்று சந்தேகநபர்கள்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கைதான மூவரும் இலங்கையர்கள் என்பதுடன், எந்தவொரு வெளிநாட்டவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அத்துடன், சந்தேகநபர்கள் எவ்வாறான தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சங்களும் கொள்ளத் தேவையில்லை. சிலர் இந்த சம்பவத்தை அரசியலாக்க முற்படுகின்றனர்.

அவர்கள் நாடு தொடர்பில் முதலில் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நாட்டு பிரஜைகளுக்கு இலங்கையில் ஆபத்து இருக்கிறது என்ற அடிப்படையில், அந்தநாட்டின் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை நடத்தியதன் காரணமாக அவர்களுக்கு அதிக விபரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கலாம்

இது பயங்கரவாத அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படவிருந்த செயல் அல்ல.

அதேநேரம், ஏப்ரல்-21 தாக்குதலுக்கு சமமான தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை.

இலங்கையில் மட்டுமின்றி, வேறு பல நாடுகளிலும் இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது.

எவ்வாறாயினும் தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் பகுதிகளிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முப்படையினர் நாடு தழுவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவர்களை எவரேனும் வழிநடத்தியிருந்தால், விசாரணையின் பின்னரே அதனை கூற முடியும்.

எனவே, பொதுமக்கள் இது குறித்து பீதியடைய வேண்டிய அவசியமில்லை.

அத்துடன், ஏதேனும் தாக்குதல்கள் தொடர்பான திட்டம் குறித்து பொதுமக்கள் தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் காவல்துறையின் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது காவல்துறை தலைமையகத்திற்கு தகவல்களை வழங்க முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.




இஸ்ரேலிய பிரஜைகளைத் தாக்குவதற்கு திட்டமிட்ட மூவரிடம் விசாரணை - விஜித ஹேரத்  அறுகம்பே பகுதியில் இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் தற்போது மூன்று சந்தேகநபர்கள்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கைதான மூவரும் இலங்கையர்கள் என்பதுடன், எந்தவொரு வெளிநாட்டவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.அத்துடன், சந்தேகநபர்கள் எவ்வாறான தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எனவே, பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சங்களும் கொள்ளத் தேவையில்லை. சிலர் இந்த சம்பவத்தை அரசியலாக்க முற்படுகின்றனர்.அவர்கள் நாடு தொடர்பில் முதலில் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலிய நாட்டு பிரஜைகளுக்கு இலங்கையில் ஆபத்து இருக்கிறது என்ற அடிப்படையில், அந்தநாட்டின் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை நடத்தியதன் காரணமாக அவர்களுக்கு அதிக விபரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கலாம்இது பயங்கரவாத அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படவிருந்த செயல் அல்ல.அதேநேரம், ஏப்ரல்-21 தாக்குதலுக்கு சமமான தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை.இலங்கையில் மட்டுமின்றி, வேறு பல நாடுகளிலும் இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது.எவ்வாறாயினும் தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் பகுதிகளிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.முப்படையினர் நாடு தழுவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.அவர்களை எவரேனும் வழிநடத்தியிருந்தால், விசாரணையின் பின்னரே அதனை கூற முடியும்.எனவே, பொதுமக்கள் இது குறித்து பீதியடைய வேண்டிய அவசியமில்லை.அத்துடன், ஏதேனும் தாக்குதல்கள் தொடர்பான திட்டம் குறித்து பொதுமக்கள் தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் காவல்துறையின் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது காவல்துறை தலைமையகத்திற்கு தகவல்களை வழங்க முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement