• Sep 20 2024

கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மயிரிழையில் மீட்பு!

Chithra / Sep 2nd 2024, 12:04 pm
image

Advertisement


கல்கிசை கடலில் நீராடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் கல்கிசை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு 09 பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சிறுவர்கள் மூவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (01) கல்கிசை கடலுக்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது, அங்கு கடமையில் இருந்த கல்கிசை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இந்த சிறுவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து அவர்களுக்கு முதலுதவி அளித்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் மயிரிழையில் மீட்பு கல்கிசை கடலில் நீராடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் கல்கிசை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.கொழும்பு 09 பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.இந்த சிறுவர்கள் மூவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (01) கல்கிசை கடலுக்கு நீராடச் சென்றுள்ள நிலையில் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதன்போது, அங்கு கடமையில் இருந்த கல்கிசை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இந்த சிறுவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து அவர்களுக்கு முதலுதவி அளித்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement