• Sep 19 2024

இலங்கை மீனவர்கள் மூவர் இந்தியக் கடற்பரப்பில் கைது

Chithra / Sep 17th 2024, 8:20 am
image

Advertisement



இந்தியாவின் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களையும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

இந்திய எல்லைக்குள் இயந்திரக் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த மூவரே கைது செய்யப்பட்டு மண்டபம் முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

இந்தியக் கடலோரக் காவல் படையின் மண்டபம் முகாமில் முழுமையான விசாரணைக்குப் பின்னர் மேற்படி மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்பகுதிக்கு வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்களா எனக் கண்டறிந்த பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று இந்தியக் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் மூவர் இந்தியக் கடற்பரப்பில் கைது இந்தியாவின் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களையும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.இந்திய எல்லைக்குள் இயந்திரக் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த மூவரே கைது செய்யப்பட்டு மண்டபம் முகாமுக்குக் கொண்டு சென்றனர்.இந்தியக் கடலோரக் காவல் படையின் மண்டபம் முகாமில் முழுமையான விசாரணைக்குப் பின்னர் மேற்படி மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்பகுதிக்கு வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்களா எனக் கண்டறிந்த பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று இந்தியக் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement