• Aug 12 2026

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: தலைகீழாகக் கவிழ்ந்த வாகனம்! இருவர் காயம்

Chithra / Aug 11th 2026, 1:34 pm
image


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மதுவ மற்றும் இமதுவ பகுதிகளுக்கு இடையே 115 ஆவது மைல்கல் அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில், ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து சேதமடைந்துள்ளது.


விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள அதிவேக நெடுஞ்சாலைக் போக்குவரத்துப் பொலிஸார் போக்குவரத்தைச் சீர்செய்து, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: தலைகீழாகக் கவிழ்ந்த வாகனம் இருவர் காயம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மதுவ மற்றும் இமதுவ பகுதிகளுக்கு இடையே 115 ஆவது மைல்கல் அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில், ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து சேதமடைந்துள்ளது.விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்றுள்ள அதிவேக நெடுஞ்சாலைக் போக்குவரத்துப் பொலிஸார் போக்குவரத்தைச் சீர்செய்து, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement